Saturday, August 13, 2011

மௌன மொழி



உருகும் பனிக்குத் தெரியும்...
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம்.
புழுதி மண்ணிற்குத் தெரியும்....
வீசிச் சென்ற புயலின் வேகம்.
வாடும் மலருக்குத் தெரியும்....
கடந்துபோகும் பொழுதின் நேரம்
விசையெனும் புவியீர்ப்புக்குத் தெரியும்...
சுற்றும் பூமியின் கொள்கனம்.
துடிக்கும் இதயத்திற்குத் தெரியும்...
பாயும் இரத்தத்தின் ஓட்டம்.
பிரகாசிக்கும் ஒளிக்குத் தெரியும்...
உள்வாங்கும் உலகின் யோகம்.
ஆனால்
உன்னையே சுவாசமாய் உணரும் எனக்குத் தெரியவில்லை
உன் மௌனம் எனும் மொழியின் அர்த்தம்
.

No comments:

Post a Comment