Thursday, July 28, 2011

சுகம்தான்...

உன்னிடம் 
தோற்று போவதும் 
சுகம்தான்... 

உன்னிடம் 
முட்டாள் ஆவதும் 
சுகம்தான்... 

உன்னால் 
கடிந்துகொள்ளப்படுவதும் 
சுகம்தான்... 

உன் அறிவுரைகளைக் 
கேட்டுக்கொண்டிருப்பதும் 
சுகம்தான்... 

உன் கட்டளைகளைக் 
கடைப்பிடிப்பதும் 
சுகம்தான்... 

உன்னால் 
திருத்தப்படுவதற்காய் செய்த 
தவறுகளின் தண்டனையும் 
சுகம்தான்... 

உனக்காக... 
என் ஆசைகள் 
சிலவற்றை மறைப்பதும் 
சுகம்தான்... 

பிடிக்காது எனினும் 
நீ செய்துவிட்டதால் 
சகித்திருப்பதும் 
சுகம்தான்... 

தன்மானம் துறந்து 
தவறு என் பக்கம் 
இல்லையென்றாலும் 
உன்னிடம் 
மன்னிப்புக்கோருவதும் 
சுகம்தான்... 

நீ எனக்கானவள்! 
என்பது 
உண்மையாய் இருக்கும் வரை... 
மட்டுமல்ல.., 
"பொய்யாய்ப் போனாலும்"


No comments:

Post a Comment