பார்த்து ரசிக்கையில்
கலைந்து செல்லும்
முகில் கூட்டமும்
பறந்து செல்லும்
பறவைக் கூட்டமும் - இது
நிரந்தரமில்லை அது
தெரிந்தும் ரசிபபதட்கு
வேறு ஏது...
கா...கா...என கரையும்
காகத்தின் ஒலியும்
கூ...கூ...என கூவிடும்
குயில்களின் இசையும்
தனிமைக்கு இனிமையாய்
காதோரம் வந்து
ஆறுதல் சொல்லுதே
அது கூட நிரந்தரமில்லை !
No comments:
Post a Comment