எதற்காகவோ சிரிக்கிறேன் ஆனால் சிந்தனை
வேறு பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது .......
மகிழ்ச்சியாக தான் இருக்கிறது மனநிலை ஆயினும்
நெஞ்சில் ஏதோ கனம் கூடிப்போனதொரு தோற்றம்...
எப்பொழுதும் சுற்றத்தார் புடைசூழ நின்றுகொண்டிருந்தும் தனிதுவிடப்பட்டதுபோல
ஒரு மாயை..... இதற்க்கு முன் நான் இப்படி இருந்ததில்லை
உன்னை கண்டபின்புதான் எனது செயல்களில் இத்தனை மாற்றங்கள் . காரணம் நீ என்று மனம் அறிந்த பின்பும் மனநல மருத்துவரை நோக்கி பயணிக்கிறேன்..... எனது இந்த காதல் நோய்க்கு மருந்து நீ என்று அறிந்தும் கால்நடையாக தொடர்கிறது எனது சிகிச்சை பயணம்...........
No comments:
Post a Comment